டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்ட  சென்னை பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

by Editor / 24-06-2021 04:42:12pm
 டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்ட  சென்னை பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்



தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென ஒரு சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் குணமடைந்துள்ளார்.
இதனால் தற்போது தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சென்னை பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நெகட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via