கொரோனாவால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்

by Editor / 14-04-2021 05:08:45pm
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துரைமுருகன்  வீடு திரும்பினார்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பல பிரபலங்கள் பாஹிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில்  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
துரைமுருகன் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இச்சூழலில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போதே அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
தற்போது துரைமுருகன் பூரண குணமடைந்துள்ளார். இன்று அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ள துரைமுருகன் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

 

Tags :

Share via