மின்சார ரயில்களில் அனைவரும்  பயணம் செய்ய  அனுமதி 

by Editor / 24-06-2021 04:24:40pm
மின்சார ரயில்களில் அனைவரும்  பயணம் செய்ய   அனுமதி 


 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக சில பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மின்சார ரயிலும் பொது மக்களுக்காக இயங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
தற்போது மின்சார ரயில் ஓடிக் கொண்டிருந்தாலும் அரசு ஊழியர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் உள்பட ஒரு சிலருக்கு மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது.; இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படிவெள்ளிக்கிழமை  முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களுக்கும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via