டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு

by Staff / 20-04-2023 02:26:57pm
டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள 3 உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் மீதம் 2 பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும், பிற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இதன் காரணமாக, துறை சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டு, அரசுப்பணியாளர்களை தேர்வு செய்யும் முதன்மை பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, வரும் ஜுன் மாதம் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெறவுள்ளதால், டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via