ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகிய மணீஷ் சிசோடியா
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், சாட்சிகளை பாதிக்கவோ அல்லது சாட்சியங்களை அழிக்கவோ சிசோடியாவால் முடியாது என்று சிசோடியாவின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிபிஐ வழக்கறிஞர்களின் விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பலமுறை ஜாமீன் மறுத்ததால் மணீஷ் சிசோடியா உயர்நீதிமன்றத்தை அணுகினார். தமக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் எதையும் ஏஜென்சிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இந்த வழக்கில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
Tags :