சென்னை வந்த பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் வரவேற்ப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்த பிரதமர், கார் மூலமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்றார். பிரதமருடன் ஒரே காரில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்தார்.
பிரதமர் வாகனத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாகனங்கள் சென்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் பாரத் மாதகி ஜே என்ற முழக்கத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags : BJP members welcome the Prime Minister who arrived in Chennai and also on the way