சக அதிகாரியால் கொல்லப்பட்ட காவலர்? கதறும் குடும்பம்

by Staff / 14-04-2024 01:05:15pm
சக அதிகாரியால் கொல்லப்பட்ட காவலர்? கதறும் குடும்பம்

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த மனோஜ்குமார் (50) என்ற காவலர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். மன அழுத்தம் காரணமாக இம்முடிவை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது ஒரு கொலை என மனோஜ்குமார் குடும்பத்தார் பகீர் கிளப்பியுள்ளனர். காவல் நிலையத்தின் இன்சார்ஜ் ராஜ் பகதூர் சிங் தான் மரணத்துக்கு காரணம் என கூறும் குடும்பம் இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via