நரிக்குடி மாணவி தட்டச்சு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

by Staff / 25-05-2024 02:12:49pm
நரிக்குடி மாணவி தட்டச்சு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரின் மகள் ரேணுகா மாநில அளவில் நடந்த தட்டச்சு தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மாநில அளவில் நடந்த அரசு தட்டச்ச தேர்வில் ஹை ஸ்பீடு பிரிவில் 10 நிமிடம் தேர்வில் 67. 5வார்த்தைகள் டைப் அடித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மாணவி ரேணுகா தற்போது நரிக்குடி மருது பாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார் மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via