பல்கலைக்கழகத் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம்.திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் சற்று முன் கைது.

by Editor / 14-08-2022 02:07:20pm
பல்கலைக்கழகத் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம்.திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் சற்று முன் கைது.

திருவாரூர் அருகிலுள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வான பிஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கருக்கு பதில் வேறொருவர் தேர்வு எழுதி பிடிப்பட்ட நிலையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் தேர்வு எழுதிய திவாகரன் மற்றும் தேர்வு எழுத கூறிய மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தற்போது திருவாரூர் தாலுகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via