மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 4 லட்ச ரூபாய் வசூலித்த 2 பேர் கைது

by Editor / 14-08-2022 02:37:53pm
மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 4 லட்ச ரூபாய் வசூலித்த 2 பேர் கைது

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகக் கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாரிமுனை பெருமாள் கோவில் தெருவில் வணிக நிறுவனம் ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

 

Tags :

Share via