டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

by Staff / 21-04-2023 01:16:30pm
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வக்கீல்கள் வளாகத்தில் ஒரு ஆசாமி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். மொத்தம் நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், வக்கீல் உடை அணிந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via