தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட 10.70 கோடி மதிப்பிலான உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட 10.70 கோடி மதிப்பிலான உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. பாங்காங்கில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து சுமார் 10.7 கிலோ எடை உள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்று சென்னை திரும்பிய போது அதிகாரிகளிடம் அவர் சிக்கி உள்ளார். அவர் வைத்திருந்த சூட்கேசில் 23 பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது .விசாரணையில், இவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்காக கமிஷன் அடிப்படையில் இந்த கடத்தல் வேலையை செய்திருப்பது தெரிய வந்துள்ளது
Tags :
















