கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை

by Editor / 03-11-2022 07:12:28am
கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும்  விடுமுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு.

இதேபோல், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் சென்னையிலும் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via