சோழவந்தான் அருகே கண்மாய் உடைந்தது

by Editor / 24-10-2022 09:05:24am
சோழவந்தான் அருகே கண்மாய் உடைந்தது

சோழவந்தான் அருகே உள்ள வடகரை கண்மாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ‌. இதன் காரணமாக பேட்டை அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதைகளில் சிறிது வெள்ள நீர் வந்தது. எனவே அந்தப் பகுதியில் ரயில்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் எச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே பேட்டை கிராமத்தில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கிராம மக்களுக்கு வேண்டுகோளுக்கிணங்க ரயில்வே கேட் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் கிராமத்தை பாதிக்காமல் வேறு பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.  கண்மாய்  உடைப்பை சரி செய்ய மாநில அரசு அதிகாரிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள்‌. நிலைமை சீரடையும் வரை பேட்டை ரயில்வே கேட் சாலையை
பொதுமக்கள் பயன்படுத்த முடியாது.

 

Tags :

Share via