முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

by Writer / 20-01-2022 08:55:14am
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்னர்.

 

Tags :

Share via