இளைஞர் தற்கொலை லஞ்சம் வாங்கிய பணி பார்வையாளர் மீது வழக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

by Editor / 13-05-2022 09:35:02am
இளைஞர் தற்கொலை லஞ்சம் வாங்கிய பணி பார்வையாளர்  மீது வழக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய பணி பார்வையாளர் மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 

நன்னிலம் அருகே மணிகண்டன் என்பவரிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ரூபாய் 18 ஆயிரத்தை நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி பார்வையாளர் லஞ்சமாக வாங்கியதால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விவகாரத்தில் பணி பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் நேற்று உத்தரவிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்கிற பிரிவின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் துறை ரீதியான விசாரணைக்கும் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : District Collector orders prosecution of youth suicide bribery overseer.

Share via