மருதுபாண்டியர் நினைவு தினம் - அமைச்சர்கள் மரியாதை

by Staff / 24-10-2023 12:53:33pm
மருதுபாண்டியர் நினைவு தினம் - அமைச்சர்கள் மரியாதை

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மருது பாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர்கிள் திருவுருவ சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பே.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் முகேஷ்குமார் உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via