இந்திய அணிவெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணிற்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஐந்தாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது .இருபது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி 225 ரன்கள் எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு வெற்றிகளை இந்திய அணி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
Tags :



















