காருக்குள் தொழிலதிபர் கொலை வழக்கு ; கொலையாளிக்கு குண்டாஸ்

by Staff / 02-09-2024 04:34:04pm
காருக்குள் தொழிலதிபர் கொலை வழக்கு ; கொலையாளிக்கு குண்டாஸ்

திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் தீபு (44) இவர் பொக்லைன் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் மற்றும் கிரஷர் போன்றவை நடத்தி வந்தார். இவர் இவர் அடிக்கடி தொழில் விஷயமாக கன்னியாகுமரி மாவட்டம் வருவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி களியக்காவிளை அருகே காரில் தீபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போது அவருடன் காரில் வந்தவரான திருவனந்தபுரம் நேமம்  பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வரும் சஜிகுமார் என்ற அம்பிளி (56) என்பவர் தீபுவை கொலை செய்துவிட்டு 10 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. போலீசார் சஜி குமாரை கைது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு எஸ்பி சுந்தரவதனம், கலெக்டர் அழகு மீனாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குண்டர்  சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் சஜிகுமாரை  கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதை அடுத்து குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via