திருடன் என நினைத்து வாலிபரை அடித்துக்கொன்ற கும்பல் கைது.
திருச்சி அருகே உள்ள அரவை ஆலையில் ஒருவரை திருட்டுப்பட்டம் கட்டி ஆலை தொழிலாளர்கள் சேர்ந்து அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த நபர் ஆலையை உடைத்து திருடவந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பு அந்த நபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்து குறிப்பிடத்தக்கது.விசாரணையில் உயிரிழந்த நபர் திருச்சி துவாக்குடி பகுதியைச் 33 வயதான சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் என்பதும் தெரியவந்தது.மரக்கடையில் பணியில் இருந்த பைசல் ஷாக் மற்றும் மப்ஜில் ஹூக் ஆகியோர் சக்கரவர்த்தியை அடித்து துன்புறுத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மரக்கடை மேலாளர் திரேந்திரன் மற்றும் ஊழியர்கள் பைசல் ஷாக், மஜ்ஜில் ஹூக் ஆகியோரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர்.
Tags :