சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 41 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.இதனைத்தொடர்ந்து 06.05.2023 -ம் தேதி முதல் 12.05.2023 -ம் தேதி வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 41 நபர்களை TNP Act - ன் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 500 பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tags :