29 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை

by Staff / 11-12-2022 04:53:06pm
29 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை

சிலே நாட்டின் ஆண்டெஸ் மலையில் லஸ்கார் எரிமலை வெடித்து சிதறும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த எரிமலை நேற்று மதியம் வெடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் எக்கச்சக்கமனா புகையும், தூசுகளும் எழுந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் விஷ வாயுக்கள் உமிழப்பட்டன. தேசிய புவியியல் மற்றும் சுரங்க சேவை மையம், வானத்தில் 6000 மீட்டர்களுக்கு புகை எழுந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் எரிமலை வெடித்தபோது நிலமும் சற்று அதிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த எரிமை வெடிப்பை தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் 30 கி.மீக்கு அப்பால் அழைத்து சென்று தங்கவைக்கப்படனர். இந்த எரிமலை கடைசியாக 1993ம் ஆண்டு வெடித்தது.

 

Tags :

Share via