தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் - சீமான் அழைப்பு

by Staff / 27-10-2023 11:32:55am
தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் - சீமான் அழைப்பு

நவம்பர் 1ஆம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில், தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்தள்ளது. இது பற்றிய அறிக்கையில், தமிழர்களுக்குக் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 1 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடுகிறோம். நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணியளவில் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை அருகில் தமைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் பெருவிழாப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவுள்ளது. இதில் பெருந்திரளாக கலந்துகொள்ள அழைக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via