10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.

by Editor / 20-11-2023 07:00:20am
10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.

ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணல் குவாரிகள் குறித்து, ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து விவரங்களை திரட்டினர். இதனடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து 10 ஐஏஎஸ்அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வரும் நாட்களில் அதிகாரிகள் முன்பு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.

Share via

More stories