எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - தனியார் நிறுவன அலுவலகத்தில் சோதனை

by Staff / 05-08-2024 02:17:04pm
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - தனியார் நிறுவன அலுவலகத்தில் சோதனை

போலி ஆவணம் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் ஜூலை 5,7,11 ஆகிய தேதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார்.

 

Tags :

Share via