ஹெலிகாப்டர் இறக்கை மோதியதில் அதிகாரி பலி
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாட்டில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் செல்ஃபி எடுக்க முயன்ற அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அரசு அதிகாரி அமித் சைனி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டரின் முன் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டர் பிளேடு உடலில் பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்ட இறக்கை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமீபத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :