விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆரோவில் அருகே ஆட்டோ ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள குயிலா பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 72). விவசாயி.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமிக்கும் இவரது மகன்கள் ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த மாதம் 21 -ம் தேதி மூத்த மகன் ஈஸ்வரனின் தூண்டுதலின் பேரில் இளைய மகன் முருகன் தனது ஆட்டோவில் அந்த வழியாகச் சென்ற பெரியசாமி மீது கொலை செய்யும் நோக்கில் வேகமாக ஏற்றினார்.இதில் படுகாயம் அடைந்தபெரியசாமி புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மற்றொரு மகன் ஈஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.இந்நிலையில் புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி இன்று பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவாக உள்ள 2-வது மகன் ஈஸ்வரனை கோட்டகுப்பம் தனிப்படைதேடி வருகின்றனர். சொந்த மகனே அப்பாவை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :