உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி 

by Editor / 05-06-2022 08:17:14am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி 

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி பெண்களுக்கான மாரத்தான் ஐந்து கிலோ மீட்டரும் ஆண்களுக்கு பத்து கிலோமீட்டர் என மாரத்தான் போட்டி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது இதில் மாணவர்கள் இளைஞர்கள் உடலையும் மனதையும் வலிமைப்படுத்தி உண்மை நேர்மையுடன் நாட்டிற்கு பணி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழலை பேணிக் காத்திடவும் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது இதில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் என சுமார் 700க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via