கடன் தொல்லை - குடும்பத்துடன் ஜவுளி வியாபாரி தற்கொலை

by Staff / 17-05-2024 12:12:53pm
கடன் தொல்லை - குடும்பத்துடன் ஜவுளி வியாபாரி தற்கொலை

தேனி - கம்பம் மெட்டு சாலையில் நேற்று கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (60), மெர்சி (58), மகன் அகில் (29) என்பது தெரியவந்தது. ஜவுளி வியாபாரத்திற்காக அதிக கடன் வாங்கிய ஜார்ஜ் அதனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், அவர் தனது குடும்பத்துடன் நேற்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via