எனக்கும் பசிக்கும்லா இரவில் பழா மரத்தில் ஏறிய யானை.

by Editor / 10-05-2023 09:20:17am
எனக்கும்  பசிக்கும்லா இரவில் பழா மரத்தில் ஏறிய  யானை.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் அருகிலுள்ள ஆரியங்காவு பகுதியில் இரவு நேரங்களில் அருகே தனியார் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை பகலில் வலம் வருகிறது. இந்நிலையில், கடுமையான பசியில் இருந்த யானை இரவு நேரங்களில் அங்குள்ள பலா  மரத்தில் ஏறி பழாப்பழத்தை பறிக்க முயற்சித்தது. இதனையடுத்து, தோட்டத்தின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் யானைக்கும் பசிக்கும்ல என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

எனக்கும்  பசிக்கும்லா இரவில் பழா மரத்தில் ஏறிய  யானை.
 

Tags :

Share via