போதைப்பொருளுக்கு அனுமதி பாதுகாப்பான நாடு

by Staff / 10-05-2023 03:51:09pm
போதைப்பொருளுக்கு அனுமதி பாதுகாப்பான நாடு உலகிலேயே அதிக மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் நாடாகவும் போர்த்துகல் உள்ளது. போர்த்துகல் நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டுக்கு சுமார் 52 லிட்டர் மது அருந்துகிறார்களாம். அதாவது வாரத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் மது அருந்துகிறார்கள். அந்நாட்டில் இன்னொரு விநோதமான அம்சமும் ஒன்று உள்ளது. அங்கு ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை. ஆனால், போதைப்பொருள் வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றம். இந்த சட்டம் 2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இதன்படி ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை வைத்திருப்பதும் குற்றப் பிரிவின் கீழ் வராது. இந்தச் சட்டத்தின் விளைவு என்னவென்றால், இன்றைய தேதியில், போதைப்பொருள் கையாளும் வழக்குகள் குறைவாகப் பதிவாகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் போர்த்துகலும் ஒன்று. இப்படி மது அருந்துவோர் இருந்தாலும், போதைப் பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்ற நிலை இருந்தாலும் போர்த்துகலில் குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.அதிகபட்ச குற்றத்திற்கே இங்கு 25 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நாட்டில் மரண தண்டனை என்பது கிடையாது. அதனால் உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்த்துகலும் ஒன்றாகவுள்ளது. இது உலகின் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாகவும் உள்ளது. மேலும் இங்கு கல்வியறிவு விகிதம் 97 சதவீதமாக உள்ளது.
 

Tags :

Share via