சட்டம் ஒழுங்கு தோல்வி - அண்ணாமலை கண்டனம்

by Staff / 26-05-2023 04:07:35pm
சட்டம் ஒழுங்கு தோல்வி - அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via