இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
கன்னட சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 39. ‘முத்தினந்த ஹெந்தி’, ‘கேரளிடா கேசரி’, ‘நிஷப்தா’, ‘சிரபந்தவ்யா’ உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார். திடீர் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிதின் கோபியை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதின் கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்மைக்காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
Tags :