கனமழை - மேக்கரை பகுதியில் குளம் உடைந்ததால் வயல்வெளிகளை சூழ்ந்த வெள்ளம்.

by Editor / 06-07-2023 11:45:52pm
கனமழை - மேக்கரை பகுதியில் குளம் உடைந்ததால் வயல்வெளிகளை சூழ்ந்த வெள்ளம். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.<br /> இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் உள்ள இரட்டைக் குளம் என்கின்ற ஒரு குளம் தற்போது அதிக தண்ணீர் வரத்து காரணமாக உடைப்பு ஏற்பட்டு குளத்தில் இருந்த தண்ணீர் அணைத்தும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தற்போது முழுவதுமாக பாய்ந்து உள்ளது.தற்போது, வயல்வெளிகளில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது.மேலும், வெள்ளமானது வயல் வெளிகளில் பாய்ந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலையானது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.&nbsp;மேலும், மழையானது தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மலைப்பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் தற்போது வந்து கொண்டிருப்பதால் குளத்தில் மேலும் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்யாததால் இந்த பகுதியில் அசாதரண சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே புதியதாக இந்த தார்ச்சாலை போடப்பட்டது.இந்தநிலையில் இந்த சாலையும் சேதமடைந்து விட்டது. &nbsp; கனமழை - மேக்கரை பகுதியில் குளம் உடைந்ததால் வயல்வெளிகளை சூழ்ந்த வெள்ளம்.
 

Tags :

Share via