3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா இன்று முதல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜனவரி 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எதிர்வரும் ஜனவரி 3ஆம் தேதி முக்கிய நிகழ்வான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.இதனையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :