கஞ்சாவுடன் முதல்வரை சந்தித்த நபர் கைது

by Staff / 29-04-2024 01:30:27pm
கஞ்சாவுடன் முதல்வரை சந்தித்த நபர் கைது

கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறி, கஞ்சாவுடன் மனு அளிக்க சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via