10 மாவட்டங்களில் 8748 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 410 பேர் கைது.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆபிரஹாம் (47) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150பேர் சிறைக்கு அனுப்பப்பட்டநிலையில் 260 பேர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கபபட்டனர்.மேலும், கைதுசெய்யப்பட்ட வர்களிடம் இருந்து 8748 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4720 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :