மின்வேலியில் சிக்கி யானை பலி தோட்ட உரிமையாளர் கைது.

by Editor / 10-04-2023 09:44:41pm
மின்வேலியில் சிக்கி யானை பலி தோட்ட உரிமையாளர் கைது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைவனப்பகுதியில் பெரிய ஆவடைப்பேரி வனப்பகுதி அருகே அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் உணவுத்தேடி வந்து சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது. யானை உயிரிழப்பு தொடர்பாக வனத்துறை அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு தோட்டத்தின் உரிமையாளர் கருப்பையா என்பவரை கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

 

Tags :

Share via