மருமகனோடு இணைந்த மாமியார் கணவனை சுட்டுக்கொன்ற கொடூரம்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. தஹார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (32), இவரது மனைவி ப்ரீத்தி (28). இந்த நிலையில், பிரீத்திக்கு தனது மருமகன் ஜானி (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்து, ஆத்திரமடைந்த சந்தீப் இந்த உறவை கைவிடச்சொல்லி மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே கடந்த வியாழன் அன்று சந்தீப் சுட்டுக்கொல்லப்பட்டு சரூர்பூர் பகுதியில் உள்ள ரிடாலி காட்டில் வீசப்பட்டார். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags : Mother-in-law with son-in-law shot her husband.