மண்சரிவில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ1 லட்சம்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலையில் கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் பலியாகினர். அவர்களின் குடும்பத்தினைரை நேற்று நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறி, தலா ரூ1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
Tags : மன்சரிவில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ1 லட்சம்