அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது என்னையே எடப்பாடி யார் என்று தான் அழைக்கிறார்கள் என் சொந்தப் பெயர் மறைந்து தொகுதி பெயர் தான் மக்கள் மனதில் நிலைத்து உள்ளது என்றும் அதனால் தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்வதன் மூலம் இந்த தொகுதியை நீங்கள் உலக அளவில் பிரபலப்படுத்துகிறீர்கள் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் உங்களால் தான் எனக்கு இந்த பதவி கிடைத்தது நீங்கள் தான் இதை எனக்கு கொடுத்தீர்கள் என்று கூறி தனது சொந்த தொகுதி மக்களிடையே பேசும்பொழுது நன்றி கலந்த நா நா தழுதழுத்த பேச்சோடு கண்ணும் கலங்கினார். எடப்பாடி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரோடு இணைந்து வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவர் திமுகவின் பிரித்தாலும் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுக பாமக கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார் m எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி ஆறாவது முறையாக போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :



















