முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தடுக்கிறார்-ஆர்.எஸ்.பாரதி 

by Editor / 06-07-2023 11:49:47pm
முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தடுக்கிறார்-ஆர்.எஸ்.பாரதி  செந்தில்பாலாஜி வழக்கில் ஆளுநர் ஆதாரம் கேட்காதது ஏன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்குகளில் ஆதாரம் கேட்கும் ஆளுநர், செந்தில்பாலாஜி வழக்கில் ஆதாரம் கேட்காதது ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகாரில் சட்ட நிபுணர்களை ஆலோசிக்க 10 மாதங்கள் தேவையா? குட்கா வியாபாரிகளிடம் மாமூல் பெற்ற விஜயபாஸ்கர், ரமணா மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தடுக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via