ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி

by Staff / 16-07-2023 03:22:17pm
ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் 35வது தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொடியை ஏற்றிவிட்டு அங்கு கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும். நாங்களும் பல முறை, பல தருணங்களாக வாய்ப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 5 ஆண்டு காலம் ஆளுவதற்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். அனைவரின் தலையெழுத்தையும் எங்களால் மாற்ற முடியும்'' என்றார்.

 

Tags :

Share via