தெற்கு சீனா, வியட்நாமில் பலத்த சூறாவளி புயல்

by Staff / 17-07-2023 04:23:25pm
தெற்கு சீனா, வியட்நாமில் பலத்த சூறாவளி புயல்

தெற்கு சீனா மற்றும் வியட்நாமில் திங்களன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர், மேலும் பயங்கர சூறாவளி வீசியதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திங்கட்கிழமை இரவு தலிம் புயல் கரையைக் கடக்கும் போது, ​​குவாங்டாங் முதல் ஹைனான் மாகாணங்கள் வரையிலான தெற்கு கடற்கரையோரத்தில் சக்திவாய்ந்த காற்று, புயல் அலைகளுடன் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிடப்பட்டள்ளது. இது நான்கு அடுக்கு வண்ண-குறியிடப்பட்ட அமைப்பில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையாக உள்ளது. புயல் தீவிரம் அதிகரித்து கடுமையான சூறாவளியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via