3 பெண்களை மயக்கி உல்லாசம்; வாலிபர் கைது

by Staff / 09-08-2023 02:39:57pm
3 பெண்களை மயக்கி உல்லாசம்; வாலிபர் கைது

சேலம் அம்மாபேட்டை பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும், 24 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கர்ப்பமாக்கியது நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வா (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஸ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விஸ்வா ஏற்கனவே 2 பெண்களை மயக்கி திருமணம் செய்தது தெரியவந்தது.

 

Tags :

Share via