மகள் மீது சந்தேகம்; கொன்று தண்டவாளத்தில் வீசிய தந்தை

by Staff / 11-08-2023 05:24:42pm
மகள் மீது சந்தேகம்; கொன்று தண்டவாளத்தில் வீசிய தந்தை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று மகளைக் கொன்றுவிட்டு சடலத்தை பைக்கின் பின்புறம் கட்டி ரோட்டில் இழுத்து சென்று தந்தை ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தந்தை இத்தகைய கொடூர குற்றத்தை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகள் வீட்டை விட்டு வெளியேறி திரும்பி வந்தபோது, ​​தந்தை கூரிய ஆயுதத்தால் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாக உள்ளார். கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via