சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ஐடி சோதனை நிறைவு

by Editor / 05-08-2022 02:55:09pm
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ஐடி சோதனை நிறைவு

மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் பட வருவாயில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மதுரையில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் நான்கு நாட்களாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via