மனநலம் பாதிக்கப்பட்டவர் ரயிலில் அடிபட்டு  பலியானார்.

by Admin / 14-08-2023 11:40:37pm
மனநலம் பாதிக்கப்பட்டவர் ரயிலில் அடிபட்டு  பலியானார்.

 

மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் எரியோடு ரயில் நிலையத்திற்கும் பாளையம் ரயில்வே நிலையத்திற்கும்  இடையே காலை சுமார் 8 மணிக்கு சாமிநாதன் வயது 38 தகப்பனார் பெயர் வேலுச்சாமி தோப்புப்பட்டி கொளத்தூர் குஜிலியம்பாறை தாலுகா திண்டுக்கல் மாவட்டம்

 மேற்படி நபருக்கு பழனியைச் சேர்ந்த நாகாத்தாள் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது 

இறந்த நபர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார் இரண்டு நாட்கள் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில்  இச்சம்பவம் நடைபெற்று உள்ளது 

இவர் சற்று மனநிலை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவருக்கு கண் பார்வையும் சற்று குறைவாக இருந்த காரணத்தினாலும் 

இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று திண்டுக்கல் இருப்பு பாதை காவல் துறை தெரிவிக்கிறது

இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via