ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Admin / 14-08-2023 11:38:30pm
ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

77 ஆவது விடுதலை நாள் விழாவின் வெற்றி ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்தினை தமிழக முதலமைச்சர் புறக்கணித்துள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

, 77-வது விடுதலை நாளை கொண்டாடும் நேரத்தில்  சென்னையில் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீசன் மற்றும் அவரது தந்தை செல்வ சேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்கு அளித்த விடுதலை எல்லோருக்கும் ஆனதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற கேள்வியை எழுப்புகிறது அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை ஒழிக்க வருகிறது ஆனால் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவியர் அவர்தம் பெற்றோரின் கனவுகளை எதிர்கால நல்வாழ்த்துக்களை இழந்து வரும் நிலையை உணர மறுத்து தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்

.. நீட் தேர்வு விளக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் .அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்துற மாட்டேன் என்று பொதுவெளியில் ஆளுநர் ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பு இருப்பவர் பொறுப்பென்று பேசுகிறான் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை உள்ளோர் தமிழர் உயிர் திறப்பதைக் கண்டு கலங்குவார். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை என்பது போல உள்ளது

இந்த நிலை மாறவே நீட் தேர்வுக்கு விளக்கு கோரி சட்டம் இயற்றிய தமிழ்நாடு அரசு மாண்புமிகு குடியரசு தலைவரின் ஒப்புவதற்காக அனுப்பி வைத்துள்ளது. மாண்பு மிகக் குடியரசு தலைவர் அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்க கோரி இன்று 14 8 2023 கடிதம்  அனுப்புகிறேன். ஆளுநர் அவர்கள் அரசியல் ரீதியாக திராவிடம் வாரியம் திமுக திருவள்ளுவர் வள்ளலார் சனாதனம் பற்றி பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை அது கவன வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆரிய புலம்பலாக ஒதுக்கி தள்ளுகிறோம்

.ஆனால், ஏழை எளிய விளிம்பு நிலை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமன பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித்துறை மீது நடத்தப்படும் சரியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது

. நாங்கள் இந்த மாநிலத்திற்கு இந்த ஆண்டு வந்து அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமை குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் பல்கலைக்கழகங்களை சிதைத்தும் உயர்கல்வி துறையை குழப்பியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவுக்கு அனுமதி தராமல் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை பெற்றோர்களை அவர்களது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம் .இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேனீர்வதி புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் தம்  அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்..

 

 

Tags :

Share via