குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மு.க.ஸ்டாலின்

by Staff / 22-08-2023 05:38:26pm
குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், 'செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் முதல், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. குடும்பத்துக்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும். இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு உங்களுடைய ஆலோசனைகள் இன்றியமையாதது' என்றார்.

 

Tags :

Share via